கூடுவாஞ்சேரியில் பெருந்தலைவர் காமராஜர்124வது பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் பங்கேற்பு….
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அருள்நகர் பகுதியில் நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது இதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் 124 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும்பிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது…..
இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நிலைபெற்ற அரசு பள்ளி மற்றும் நீலன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு. கல்வி உதவித்தொகை வழங்கும் விழா. மற்றும் நீலான் ஸ்டுடியோ திறப்பு விழா. ஸ்மார்ட் கணினி ஆய்வகம் திறப்பு. மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது…..
விழாவில் நீலன் கல்வி அறக்கட்டளை தலைவர் நீலன் அசோகன் தலைமை தாங்கினார்.
இதில் செங்கல்பட்டு தொகுதி எம் எல் ஏ தியாகராஜன் நீலன் பள்ளி சேர்மேன் நீலன் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி அனைவரையும் வரவேற்றனர் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் கலந்துகொண்டு காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஐம்பொன் விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்….
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் அரசு பள்ளி மற்றும் நீலன் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்…
மேலும் இவ்விழாவில் நகர பொறுப்பாளர் பார்த்தசாரதி. பள்ளியின் ஆசிரியர்கள். மாணவர்கள். மற்றும் த வே க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் நீலன் தமிழ் கலை இலக்கிய பண்பாற்று மன்றம் ஒருங்கிணைப்பாளர் வி. சிம்சன் ராஜ்குமார் நன்றி கூறினார்…….













