மாதவரம் இரட்டை ஏரி பகுதி அமைந்துள்ள முத்து மாரியம்மன் ஆலய 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
வடசென்னை மாதாவரம் அடுத்த இரட்டை ஏரி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் ஆலயத்தின் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது இந்த ஆலயத்தில் 53 ஆண்டுகளாக வருடா வருடம் ஆடி மாதம் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு ஆலயத்தின் விழாவான துவங்கும் அதன் பின்பு இசை நிகழ்ச்சிகள் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் ஆகியவை தொடர்ந்து செய்யப்பட்டு விழாவானது நடைபெறுவது வழக்கம்
அதேபோன்று இந்த ஆண்டு 53 ஆம் ஆண்டாக தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது இந்த தீமிதி திருவிழாவில் 120 குமார மார்கள் காப்பு கட்டி விரதமிருந்து பூக்குழி இறங்கினர்
அதன் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு விழாவில் கலந்து கொண்ட பக்த கோடிகளுக்கு அம்மன் காட்சியளித்தார்
விழாவில் மாதவரம் திருவள்ளூர் அரக்கோணம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி மற்றும் மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்













