குத்தாலம் மற்றும் சீர்காழி ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் , டெக்னிசியன்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பெறும் அவதி, காலை நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை, மேலும் புதிதாக அமைக்கப்பட்ட சிடி ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதமாக பழுதாகி உள்ள நிலையில், ஸ்கேன் எடுக்க நோயாளிகளை தனியாருக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் ஏழை எளிய நோயாளிகள் பொருட் செலவு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்,
இதுபோல் குத்தாலம் அரசு மருத்துவமனையில், கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. பெரும்பாலும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வரும் நிலையில், எட்டு மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் நான்கு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும், இரவு நேரத்தில் பெரும்பாலும் மருத்துவர்கள் இல்லாத நிலைமையில் உள்ளது எனவும், நோயாளில் சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை உள்ளது எனவும், காலை நேர கூட்ட நெரிசல் காரணமாக தங்களது தினசரி வேலை தாமதப்படுவதாகவும், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைட்:-
பொதுமக்கள் ஒருவர் பைட் உள்ளது













