கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ வீரடி சாய்பாபாவுக்கு ஆடிமாதம் மூன்றாம் நாளை முன்னிட்டு நடைபெற்ற பால் அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் SRKBV பள்ளி அருகே உள்ள வீரடி சாய்பாபா கோயில் 12 ஆம் ஆண்டு துவக்க விழாவாகிய ஆடி மூன்றாவது நாளான இன்று சாய் பாபா பயனை மண்டலியில் வைத்து சாய்பாபா வுக்கு 501 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாய்பாபா வுக்கு பால் அபிஷேகம் செய்தனர் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆரத்தி மற்றும் தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து தியானம்,பஜனை, அருளாசி, கூட்டு பிராத்தனை நடைபெற்றது அதை தொடர்ந்து பல வகை மலர்களால் புஷ்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது இந்த நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்













