மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் சகோபுர தரிசன காட்சி நடைபெற்றது:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மயில் உருவில் ஸ்ரீஅபயாம்பிகை அம்மன் சிவனை பூஜித்த ஸ்ரீ மாயூரநாதர் ஆலயம் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் வைகாசி மாத விசாகப் பெருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் திருநாளாக காலை பஞ்ச மூர்த்திகள் நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு பஞ்ச மூர்த்திகள் சகோபுர தரிசனக் காட்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு மகாபூரணாகுதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு ஓலைச் சப்பரங்களில் மாயூரநாதர் அபயாம்பிகை அம்மன் எழுந்தருள செய்யப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. சிதர் தேங்காய் உடைத்து நடைபெற்ற ஓலைச்சப்பர வீதி உலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 27 ஆம் தேதி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவமும், 29ஆம் தேதி தேரோட்டம் 30ஆம் தேதி கோயில் திருக்குளத்தில் விசாக தீர்த்தவாரி நிகழ்ச்சியும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 2ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.













