தரங்கம்பாடி அருகே இலுப்பூர் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா; பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்தும், வாயில் 16 அடி நீள அலகு குத்தியும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர் ; கண்கவர் வானவேடிக்கை பக்தர்களை கவர்ந்தது:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவழா கடந்த 18 ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கிய விழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மேட்டுத்தெரு, மேலத்தெரு, வடக்குத் தெரு, கீழத்தெரு, தெற்க்குத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வீதியுலா காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து காத்தவராயன் திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. காலையில் பால்குடம் எடுத்தல் அதனை தொடர்ந்து மாலை வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து பம்பை மேளம் முழங்க சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்தும், வாயில் 16 அடி நீள அலகு குத்தியும் கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை அடுத்து விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். மேலும், விண்ணைமுட்ட கண் கவரும் வானவேடிக்கை பொதுமக்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.













