நாகப்பட்டினம்மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 2 லட்சத்து 59 ஆயிரத்து 620 ஆண்களும், 2 லட்சத்து 68 ஆயிரத்து 298 பெண்களும், 29 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 947 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது இவ்வாறு 3 சட்டசபை தொகுதிகளில் 87 % சதவீதம் பதிவானது வாக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகப்பட்டினம் பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லு£ரிக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 23ம் தேதி முதல் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம் உதவியுடன் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது 24 மணி நேரமும் சிசிடிவி கேமிரா மூலம் வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பில் இருந்து வந்தது தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர், சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்து அங்குள்ள பதிவேட்டில் கையப்பம் இட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் ஸ்டாரங் ரூமை பார்வையிட்டு சென்றனர். அதே போல் வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு பலத்த பாதுகாப்புடன் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் செய்துள்ளனர். நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் தரை தளத்திலும், கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் முதல் தளத்திலும், வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் இரண்டாம் தளத்திலும் வைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு 16 மேஜைகள் போடப்பட்டுள்ளது. இங்கு பதிவான வாக்குகள் 14 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ண 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. எனவே இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. எனவே 3 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் 50 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.











