July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, காப்பாத்துங்க ; நேபாளத்தில் சிக்கிய இந்திய பெண் கண்ணீர்

by Priscilla
September 10, 2025
in News
A A
0
நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, காப்பாத்துங்க ; நேபாளத்தில் சிக்கிய இந்திய பெண் கண்ணீர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நேபாளத்தில் சிக்கிக் கொண்ட தங்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று இந்திய பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நேபாளத்தில் வாட்ஸாப், பேஸ்புக், யுடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அரசு முடக்கியதைக் கண்டித்து அந்நாட்டு இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தலைநகர் காத்மாண்டு, பொகாரா, பிரத்நகர், மற்றும் பரத்பூர் ஆகிய இடங்களில் கலவரம் மூண்டது. அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

மேலும், பல்வேறு கட்டடங்கள், வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். முன்னாள் பிரதமரின் மனைவியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்துக் கொன்றனர். இதனால், நேபாளத்தில் பதற்றமான சூழல் நிலவியது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே, பிரதமர் மற்றும் அதிபர்கள் பதவி விலகியுள்ளனர். நேபாளத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறையால் நேபாளத்தில் சுற்றுலா மற்றும் பிற காரணங்களுக்காக சென்ற வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்தியர்களும் அங்கு சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில், வாலி பால் போட்டியை நடத்துவதற்காக நேபாளம் சென்ற உபாசனா கில் என்ற இந்தியப் பெண் ஒருவர், தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியிதாவது; எங்களுக்கு உதவுமாறு இந்திய தூதரகத்தை கேட்டுக்கொள்கிறேன். நான் நேபாளத்தின் பொகாராவில் சிக்கியுள்ளேன். ஒரு வாலி பால் லீக்கை நடத்துவதற்காக நான் இங்கு வந்திருந்தேன். தற்போது, நான் தங்கியிருந்த ஹோட்டல் தீ வைத்து எரிக்கப்பட்டுவிட்டது. என்னுடைய பொருட்கள் அனைத்தும் எனது அறையில் மாட்டிக் கொண்டன. முழு ஹோட்டலும் தீ வைக்கப்பட்டது. நான் ஸ்பாவில் இருந்தேன்.போராட்டக்காரர்கள் குச்சிகளை எடுத்துக் கொண்டு என்னை துரத்தி வந்தார்கள். நான் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்டேன்.

இங்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. எல்லா சாலைகளிலும் தீ வைக்கப்படுகிறது. இங்கு வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. ஒருவர் சுற்றுலாப் பயணியா அல்லது வேலைக்காக வந்தவரா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. யோசிக்காமல், எல்லா இடங்களிலும் தீ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள நிலைமை மிக, மிக மோசமாகிவிட்டது. இன்னொரு ஹோட்டலில் நாங்கள் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்திய தூதரகத்திற்கு இந்த வீடியோவை அனுப்ப வேண்டும். கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். என்னோடு இங்கு பலர் உள்ளனர். நாங்கள் அனைவரும் இங்கு சிக்கியுள்ளோம், இவ்வாறு கூறினார்.

இதேபோல, கேரளாவைச் சேர்ந்த 40 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட வன்முறையால் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் காத்மாண்டு விமான நிலையத்தில் பரிதவித்து வருகின்றனர்.

கலவரத்தின் போது, பாதுகாப்பு கேட்டு கவுசாலா போலீஸ் ஸ்டேஷனுக்கு 40 பேரும் சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாக கூறியுள்ளனர். அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த இந்திய சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், நேபாளத்திற்கான இந்திய தூதரகமும் முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: INDIAN WOMANNEPALprotestSOCIAL MEDIAS BANNED
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி : யார் அந்த 14 எம்.பிக்கள் ?

Next Post

கிராமத்தில் சுற்றிய புலி ; வனத்துறை அதிகாரிகள் மீது கிராம மக்கள் பரபரப்பு !

Related Posts

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை
News

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026
Next Post
கிராமத்தில் சுற்றிய புலி ; வனத்துறை அதிகாரிகள் மீது கிராம மக்கள் பரபரப்பு !

கிராமத்தில் சுற்றிய புலி ; வனத்துறை அதிகாரிகள் மீது கிராம மக்கள் பரபரப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

July 26, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க செய்ய பல்லாயிரம் ரூபாய் லஞ்சம்

July 24, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
“கூட்டுறவுத் துறையில் புதிய அதிரடி!” – மதுரை சரகத் துணைப்பதிவாளராக ஆசைத்தம்பி இன்று பொறுப்பேற்பு!

“கூட்டுறவுத் துறையில் புதிய அதிரடி!” – மதுரை சரகத் துணைப்பதிவாளராக ஆசைத்தம்பி இன்று பொறுப்பேற்பு!

March 6, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.