சீர்காழி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு கிராமத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில்,கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வில் சீர்காழி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ரவிச்சந்திரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.எம். ரவி,முன்னாள் சீர்காழி ஒன்றிய குழு தலைவர் எம்.என்.ஆர். ரவி
இவர்களுடன் திமுக கிளைச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சருக்கு மரியாதை செலுத்தினர்.














