மயிலாடுதுறையில் எஃப்.கியூ.எல் ஆப் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார்:-
எஃப்.கியூ.எல். (FQL) எக்ஸ்சேஞ் என்ற பெயரில் செல்போன் செயலியில் பணம் செலுத்தி விளையாடினால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்றும், குறைந்த பட்சம் ரூ.54 ஆயிரம் செலுத்தினால் ஒருநாளைக்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் ரூபாய் 1 லட்சம் செலுத்தினால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகூறி மதுரை கட்டையம்படடியை சேர்ந்த ரஞ்சித், அருண் ஆகியோர் தெரிவித்ததோடு இடைத்தரகர்கள் மூலம் பலபேரை இணைத்துள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அப்பங்குளத்தை சேர்ந்த இடைத்தரகர் பேபி, மற்றும் மதுரை கட்டையம்பட்டியை சேர்ந்த செல்வா ஆகியோர்கள் மூலம் அப்பங்குளம் கிராமத்தில் உள்ளவர்கள் இணைந்துள்ளனர். ஒவ்வொருவரும் புதிதாக 5 நபர்களை சேர்த்தால் தான் ஓரே வாரத்தில் 15 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று மூளைசலவை செய்ததால் 150க்கும்’ மேற்பட்டவர்கள் ரூபாய் 54 ஆயிரம், 1லட்சம் பணத்தை ஆப்பில் டெபாசிட் செய்து இணைந்துள்ளனர். வெளிநாட்டு டாலர் மதிப்பில் பணம் எறியதுபோல் காட்டியுள்ளது. டாலர் மதிப்பில் பணம் வருவதுபோன்று குறுஞ்செய்திகளையும் செல்போனுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் எஃப்.கியூ.எல். எக்ஸ்சேஞ் மோசடி செய்துள்ளது ஏமாற வேண்டாம் என்று விளம்பரம் வந்த நிலையில் இடைத்தரகர் அப்பங்குளம் பேபியிடம் போய் கேட்டபோது செலுத்திய பணத்தில் பாதி தருகிறோம் என்று கூறியதால் பணம் கட்டியவர்கள் அவர்கள் மூலம் அறிமுகமானவர்களுக்கு இடையே திரும்ப பணத்தை கேட்டு பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் எஃப்.கியூ.எல்லில் பணத் செலுத்தி ஏமாந்த அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் பணத்தை மீட்டுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளனர்.















