ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கும் 7850 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களாக பணிபுரிந்து பதவி உயர்வில் சென்று ஓய்வு பெற்ற ஊர்நல அலுவலர் மேற்பார்வையாளர் நிலை இரண்டு பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பிற அரசு பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் இதனால் வரை அரசு வழங்கப்படாததை நிலுவையுடன் வழங்கிட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் 2017 அக்டோபர் முதல் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை பணி ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், மேலும் 7850 உடன் அகவிலைப்படி மற்றும் பண்டிகை முன்பணம் மருத்துவ படி வழங்கிட வேண்டும்.
மாத ஓய்வூதியம் மாத கடைசி வேலை நாளில் வழங்க வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்ற வாழ்வுறுதி சான்றை ஆன்லைனில் மற்ற பிற ஊழியர்களுக்கு உள்ளதை போல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.















