கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் நிர்வாகிகள், மாவட்ட மற்றும் பகுதி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதனால் வடசேரி சந்திப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

















