பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் வழிபாடு தேர்தலில் வெற்றி பெற நந்தி பகவான் காதில் கூறிய பொதுச் செயலாளர் .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் ஆயுள் ஹோமம் சஷ்டி பூர்த்தி திருமணங்கள் நடைபெறுகிறது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார் இப்பொழுது கோவிலுக்கு வந்த அவருக்கு கட்சியினர் மற்றும் பக்தர்கள் சிலர் முண்டியடித்துக் கொண்டு சால்வை மாலை அணிவித்து செல்பியும் எடுத்துக் கொண்டனர் முன்னதாக சாமி தரிசனம் செய்த போது நந்தி பகவான் காதில் அரசியல் தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு கூறினார் விநாயகர் மற்றும் சுவாமி அம்பாள் சன்னதிகளில் மனமுருக வழிபாடு செய்தார் புஸி ஆனந்த் மற்றும் அவர் குடும்பத்தினர்.















