திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் மிகவும் தாமதமாக துவங்குவதால், பொதுமக்கள் அவதி, அலுவலக வேலைகளை விட்டுவிட்டு செல்போனில் மூழ்கிய படி, காத்திருக்கும் பல்வேறு துறை அதிகாரிகள், வேலைகள் பாதிக்கப்படுவதாக வேதனை:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில், மக்கள் மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் வருவாய்த்துறையினர் ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளாட்சித் துறையினர், காவல்துறையினர், மின்சாரத் துறையினர், பொதுப்பணித்துறையினர், சுகாதாரத் துறையினர், நீர் வள ஆதாரத்துறையினர் என அனைத்து துறை அதிகாரிகள் அல்லது அவர்களது அலுவலகப் பிரதிநிதிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். ஆனால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய மனுநீதி நாள் முகாம், இரண்டு மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு துவங்கி தாமதமாக முடிவடைகிறது. இதன் காரணமாக மனுநீதி நாள் முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது, மேலும் அரசு அலுவலகங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவும் வரும் நிலையில், அலுவலக வேலைகளை பாதியில் முடிக்க முடியாமல் அதிகாரிகளும் கூட்ட அரங்கில் காத்திருக்கின்றனர். மேலும் மேலே எதுவும் இல்லாமல் செல்போனில் மூழ்கிய படி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காத்திருக்கும் காட்சிகளை காண முடிகிறது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய நேரத்தில் வாரம் தோறும் மனுநீதி நாள் முகாமை நடத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்…















