கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம். ஆசிரியர் மீது மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி அருகே தோவாளை அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆரல்வாய்மொழி தோவாளை செண்பகராமன் புதூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன அந்த சத்திர மாத்திரையை வாங்கி சாப்பிட்ட மாணவி ஒருவர் மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து பள்ளிக்கு சென்ற மாணவியின் பெற்றோர்கள் மாணவியை மீட்டு ஆரல்வாய்மொழிப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி மயங்கி விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் சத்து மாத்திரை ஒன்று சாப்பிடுவதற்கு பதிலாக மாணவி அதிக மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டது மயக்கத்திற்கு காரணம் என தெரிய வந்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில் பள்ளியில் சத்து மாத்திரைகளை மாணவிகளுக்கு தனித்தனியாக வழங்காமல் மேஜையில் மொத்தமாக வைத்துள்ளனர் மாணவிகள் தானாகவே மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டுக் கொள்ளுமாறு கூறியதாக தெரியவந்துள்ளது. அதன்படி மாணவ மாணவிகள் மேஜையில் இருந்த மாத்திரைகளை எடுத்து சாப்பிடும் பொழுது மயங்கி விழுந்த மாணவி மட்டும் அதிக மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. மாணவர்கள் மாத்திரை சாப்பிட்டதை கவனிக்க தவறிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் மனு அளித்தார்.














