முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செய்து, பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர் :-
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 36 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில், ராஜீவ் காந்தியின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு பானுசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், தொடர்ந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












