திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 1 முதல் ஜூலை 15 வரை கோடைக்காலம் காரணமாக, கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால், விஐபி பிரேக் தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
இந்த காலகட்டத்தில், மிக முக்கியமான பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து வரும் சிபாரிசு கடிதங்களை மே 3 முதல் ஜூலை 15 வரை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விதிகளை மீறி வழங்கப்படும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில், கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.