வாஷிங்டன் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றமான நிலைமை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான போர் நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ளன. இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இது மிக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உருவான முடிவாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருநாட்டுகளுக்கும் இடையேயான கடுமையான நிலைமை சரிகட்டப்பட்டு வரும் நேரத்தில், இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருக்கிறது.
ஆனால், இதுவரை இந்திய மத்திய அரசு இதுபற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது