திருப்பத்தூரில் பாதாள சாக்கடையில் இருந்து கடைகளுக்குள் வெளியேறும் மலக்கழிவுகளை கைகளால் ஊழியர்கள் அள்ளிக் கொட்டும் அவலம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டின் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டு நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் திருப்பத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை கழிவு நீர் முன்னேறி செல்லாமல் ஆங்காங்கே சாலைகளிலேயே வெளியேறி தேங்கி நிற்கும் தொடர் அவலம் குறித்து பல புகார்கள் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத நிலையில்…
நகராட்சியின் மெத்தனப்போக்கு மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு மேற்பார்வை இல்லாத காரணத்தினால் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள கடைகளில் பாதாள சாக்கடை கழிவுகளில் கலந்து வரும் மலக்கழிவுகள் கடைகளின் நடுவே வெளியேறி வருவதால் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கைகளாலே அந்த மல கழிவுகளை அள்ளி பக்கெட்டில் எடுத்துச் சென்று பக்கத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த மல கழிவுகளை அள்ளும் நபருக்கு மட்டுமல்லாமல் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர் மற்றும் உரிமையாளர் அனைவருக்கும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் இருப்பதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு செய்யும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்














