ஜப்பானில் நடைபெற்ற கராத்தேவுக்கான போட்டியில் வென்ற தமிழக வீரர்கள். கராத்தே தலைவர் கையால் ஏழாவது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை வழங்கி கௌரவிப்பு:-
அவிநாசி மற்றும் மஸ்கட்டில் போதி லைஃப் ஸ்கில்ஸ் அகாடமி நிறுவனத்தின் தலைமை பயிற்றுநருமான குமார் தலைமையிலான குழுவினர் கராத்தே அறங்கில் சாதனை படைத்தனர். ஜப்பான் ஓக்கினோவா நகரில் சமீபத்தில் நடைபெற்ற கராத்தேவுக்கான உலகமட்ட பயிற்சி மற்றும் போட்டிகளில் கலந்துகொண்டனர். இவர்கள் டெமோ பிரிவில் தங்கப்பதக்கம், கட் ஆப் பிரிவில் தங்க பதக்கம் என்று சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இசின்றியூ கராத்தே அமைப்பின் உலகத் தலைவர் ஹன்சி கிச்சிரோ ஷிமா புக்கு சாதனை படைத்த மாணவர்களுக்கும் பயிற்றுநர் குமாருக்கும் ஏழாவது டான் சிகப்பு வெள்ளை பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதுகுறித்து பயிற்றுனர் குமார் கூறுகையில் சென்னை மற்றும் ஜப்பானில் போதி லைப் ஸ்கில்ஸ் அகாடமி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து கராத்தே உலகத் தலைவரின் கையால் விருது பெற்று பெருமை சேர்த்தனர். இதுகுறித்து தலைமைப் பயிற்றுனர் குமார் கூறுகையில் சர்வதேச கராத்தே அரங்கில் தாணும், தங்களது மாணவர்களும் சென்னையில் நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து கராத்தேவின் ஹாய் வீடான ஜப்பானில் ஏழாவது தான் வெள்ளை சிவப்பு பெல்ட் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.














