சீர்காழி அருகே கஞ்சா, மது பிரியர்களின் சொர்க்க புரியான பூம்புகார் கல்லூரி விளையாட்டு மைதானம்.மீட்டெடுக்க முன்னாள் மாணவர்கள் அப்பகுதி மக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் செயல்படும் பூம்புகார் கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த கல்லூரிக்கு எதிரே பல ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தை கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி வாக்கிங் செல்வதற்கு பொதுமக்களும் உள்ளூர் விளையாட்டு ஆர்வலர்களும் பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த விளையாட்டு மைதானத்தில் திரளும் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர் இதனால் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பாட்டில் கண்ணாடிகள் கிழித்து காயமடைந்து பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த விளையாட்டு மைதானத்தை ஒட்டி பாலடைந்த நிலையில் உள்ள மாணவர் விடுதி, சமையல் கூடம் புதர்கள் மண்டி கிடக்கிறது. கஞ்சா, மது பிரியர்களின் புகலிடமாக திகழ்கிறது. இங்கு கஞ்சா புகைப்பவர்கள் ஆனந்தத்தின் எல்லையை எட்டி போடும் கூப்பாட்டால் விளையாட்டு மைதானத்திற்கு வரும் பொதுமக்கள் மட்டுமின்றி மைதானத்தை ஒட்டி வசிக்கும் பொது மக்களும் பெரும் சிரமத்திற்கும் இன்னலுக்கும் ஆளாகின்றனர். இதுகுறித்து மேலையூர் பகுதி மக்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும் பூம்புகார் போலீசுக்கும் பலமுறை புகார் அளித்தும்எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மது மற்றும் கஞ்சா பிரியர்களின் சொர்க்க புரியாக உள்ள பூம்புகார் கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் போலீஸ் உதவியுடன் மீட்டு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாத்து முழுமையான மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பேட்டி:
01.சபரிராஜன் (முன்னாள் மாணவர்)

















