புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்!
NULM தூய்மை பணியாளர்கள், அம்மா உணவகம் உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.
சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் மதர்ஷா எதிரில் நடைபெற்ற போராட்டத்தில், NULM தூய்மை பணியாளர் கள், அம்மா உணவகம் உள்ளிட்ட மாநகரா ட்சியின் அனைத்து துறைகளிலும் பணியா ற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத் தப்பட்டது.
மேலும், கலைக்டர் உத்தரவின்படி சம்பளம் வழங்க வேண்டும், பென்ஷன் திட்டத்தில் GPF வசதி வழங்க வேண்டும், CPS பணம் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும், EL சரண்டர் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஊழியர் கள் பங்கேற்று, தங்களது நீண்டகால கோரி க்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.















