பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், ‘புலே’ திரைப்படம் ரிலீசாக தள்ளிப்போனது குறித்து காட்டமாகப் பதிலளித்துள்ளார். சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக வேண்டியிருந்தது.
ஆனால், படம் எதிராக ஒரு பிராமண சமூகத்தினர் கண்டனம் தெரிவித்ததால், தற்போது படம் ஏப்ரல் 25-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்தியாவில் சாதிகள் இல்லையென்றால், புலே போன்றோர் எதற்காக போராடினார்கள்? சாதி இல்லையென்றால், பிராமணர்கள் எதற்காகக் கோபப்படுகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இந்தியாவில் சாதியின்மை இருக்கிறதா இல்லையா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. சமூக சீர்திருத்தங்களை மையமாகக் கொண்ட படங்களின் வெளியீட்டில் ஏற்படும் சவால்கள் மீதான விவாதத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.