தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து, மயிலாடுதுறையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் :-
தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகள் மற்றும் எருக்கூர் நவீன சேமிப்புக் கிடங்கை கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்லாயிஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சித்தர் காடு நுகர்வோர் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் வாயிலில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மண்டல தலைவர் பொன் நக்கீரன் தலைமை தாங்கினார், சங்கத்தின் மாநில தலைவர் கோசி.வள்ளுவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கண்டன உரையாற்றினார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.













