மயிலாடுதுறையில் தனியார் நிதிநிறுவனம் நான்கு மாதம் தவணைதொகை கட்டாததால் வாகனத்தை பறிமுதல் செய்த நிலையில் வட்டியுடன் தவணைதொகையை செலுத்த வந்த வாகன உரிமையாளரிடம் தொகையை பெறாமல் வாகணத்தை ஒப்படைக்காமல் அழைக்கழிப்பதாக குற்றசாட்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் நிறுவனத்திற்கு வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:-
மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. 6 மாநிலங்களில் 100 கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த அன்பரசன்(39) என்பவர் தனது டூரிஸ்ட் வேனை அடமானம் வைத்து ரூ.7.50 லட்சம் பணம் பெற்றுள்ளார். அதற்காக 15 மாதத்திற்கு மாதம் தலா 28 ஆயிரமு, 33 மாதத்திற்கு மாதம் தலா 24 ஆயிரம் என தவணத்தொகை 48 மாதம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாதம் 28ஆயிரம் என 11 மாதத்திற்கான தவணத்தொகை செலுத்திய நிலையில் கடந்த 4 மாதங்களாக தவணை தொகை செலுத்தாததால் நிதிநிறுவனம் அன்பரசன் வாகனத்தை பறிமுதல் செய்து சென்றுள்ளனர். அதன்பிறகு தவணைத்தொகையை அதற்கான அபராதத்துடன் பணத்தை செலுத்துவதற்காக அன்பரசன் வந்தபோது கடந்த ஒருவாரத்திற்கு மேலாக தவணைத்தொகையை பெற்றுக்கொள்ளாமல் அலைகழித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அன்பரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நகர செயலாளர் விஜய், மாவட்ட செயற்குழு ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகளிடம் தெரிவித்ததை அடுத்து நிறுவன மேலாளர் சரியாக பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உடன் அன்பரசன் மாலை திருவிழந்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்திற்கு சென்று நிதிநிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிதிநிறுவனத்தில் காரை அடமானம் வைத்து தவணை தொகை சரியாக செலுத்திவந்த நீடூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(37) என்பவர் கடன் தொகை 20 மாத தவணை தொகையில் 14 மாதம் செலுத்தியபின் எஞ்சிய 6 மாத பணத்தை முழுமையாக செலுத்தி வாகனத்தின் ஆர்சி புத்தகத்தை பெறவரும்போது கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அவரையும் அலைகழித்ததாக கூறி அவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். நிதிநிறுவனத்தினர் மோசடி செய்து ஏழை மக்களை ஏமாற்றும நோக்கில் செயல்படுவதால் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்த வாகனத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மயிலாடுதுறை போலீசார் நிதிநிறுவனத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வட்டிபணத்தை கூடுதலாக பெறுவதற்காக மாத தவணையை பெறாமல் நிதி நிறுவனம் அலைக்கழிப்பதாக கடன் பெற்றவர்கள் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














