காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதி மசூத் அசாரின் உறவினர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக, நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்வதாக இருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.