இந்திய டெஸ்ட் அணி அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக இருப்பதற்கு பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, இந்திய டெஸ்ட் அணிக்கு இளம் வீரர்களில் ஒருவரை கேப்டனாக கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு சுப்மன் கில் தகுதியானவராக இருப்பார் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.