சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரியன் ஜோசப் தலைமையில் மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும். மாநில உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனான உறவுகளை மேம்படுத்திட ஆய்வு செய்து உயர்மட்ட குழு அறிக்கை அளிக்கும். ஜனவரியில் உயர்நிலைக்குழு இடைக்கால அறிக்கையும் வழங்கும் என்று தெரிவித்தார்
இதையடுத்து, மாநில சுயாட்சி தொடர்பாக முதலைமைச்சர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்காக பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.