இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் இடம் கிடைக்கவில்லை.
இதனால் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற இல்லாத நிலையில் 36 வயதான பியூஷ் சாவ்லா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
பியூஷ் சாவ்லா இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளும்,25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும், 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். 2012 டிசம்பர் 22 அன்று இங்கிலாந்துக்கு எதிரான டி20க்குப் பிறகு, தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், இவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இளம் வயதில் அறிமுகமான இந்திய கிரிக்கெட் வீரர் சாவ்லா தான் என்ற பெறுமை இருக்கிறது.
தேசிய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கிரிக்கெட் உலகில் பிரபலமானவர். அனைவரும் அவரது ஓய்வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.