70 ஆண்டுக்கு மேலாக தங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி ஏழுமகளூர் கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எழுமகளூர் வடக்கு தெருவில் வசிக்கும் கிராம மக்கள் அனைவருக்கும 70 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் முன்னோர்கள் அனுபவித்து வந்த இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். ராகு நாகராவ் என்பவரிடம் வேலை பார்த்த 60 குடும்பத்தினருக்கு கொடுத்த இடத்தை நாங்கள் பத்திர பதிவு செய்யவில்லை. அந்த இடம் ஆதிதிராவிடர் நலத்துறை வசம் உள்ளது. 70 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி ஆதிதிராவிடர் நலத்துறையிடம் மனு அளித்தோம். பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் அனைவருக்கும் வழங்காமல் குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 60 குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கிராம மக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளனர்.

















