August 29, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

by Satheesa
August 28, 2026
in News
A A
0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் நேரலையில் பார்த்து முகம் சுளிக்கிறார்கள்; மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசு யோசித்து முடிவு செய்ய வேண்டும் – நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேட்டி

பேட்டி: முத்தரசன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்.

டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டத்தில் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வேளாங்கண்ணி பேராலய திருவிழா நடைபெற்று வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் பள்ளி வைக்க கேட்டுக் கொண்டதின் பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன்…

ஜூன் 12 ல் மேட்டூர் அணை திறக்கப்படாதது, தற்போது மழையின்மை ஆகியவற்றால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான வறட்சிக்கு உள்ளாகி உள்ளன. குருவை சாகுபடி செய்ய முடியாமலும், செய்து பாதிப்படைந்த நிலையில், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உளளது. இதன் காரணமாக டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தை பொருத்தவரை அருகில் உள்ள வேளாங்கண்ணி பேராலய திருவிழா தொடங்க உள்ள நிலையில் அங்கு வரும் பக்தர்கள் நலன் கருதி முற்றுகைப் போராட்டத்தை தள்ளி வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பொதுமக்கள் குறிப்பாக வேளாங்கண்ணி பக்தர்கள் நலன் கருதி முற்றுகை போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம்.

சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எது, எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமான தமிழக சட்டமன்றத்தில் நடப்பவற்றை மக்கள் நேரலையில் பார்த்துவிட்டு முகம் சுளிக்கிறார்கள். தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தலை விரித்து ஆடுகிறது. குருவை சாகுபடி இல்லாமல் போனது. சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. கடுமையான வறட்சி பாதித்த மாவட்டங்களாக டெல்டா மாவட்டங்கள் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் விவாதிக்காமல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வறட்சி பாதிப்பு குறித்து ஒரு சிறப்பு விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதில் டெல்டா பகுதியை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது ஊராட்சியில் 10 பேர் 15 பேர்களுக்கு மட்டுமே தற்போது வேலை வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்தபடி 345 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். குருவை சாகுபடி இல்லாத காரணத்தினால் பாதிப்படைந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டம் தனியாரிடம் விடப்பட்டு இருப்பதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை அதனால் பயிர் காப்பீடு திட்டத்தை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவாக அளித்துள்ளோம். இதனை அரசுக்கு அனுப்பி வலியுறுத்துவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை மனு மீது அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

கர்நாடக அரசை பொருத்தவரை அது ஒரு ஜனநாயக அரசாக இல்லாமல் மூர்க்கத்தனமான அரசாக இருக்கிறது. யார் சொன்னாலும் காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம், அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்துவோம் என்று கர்நாடகம் பிடிவாதமாக உள்ளது. அதனால் அங்கிருந்து தண்ணீரை பெறுவதற்குரிய உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு அதன் பின்னர் மேட்டூர் அணை திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். தற்போதைய சூழலில் அணை திறக்கப்பட்டு சம்பா சாகுபடி தொடங்கிய பிறகு தண்ணீர் இல்லாமல் அணை மூடப்பட்டால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே அரசு இந்த விஷயத்தில் யோசித்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

Related Posts

தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
News

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
News

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
News

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
News

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் நெல்மணிகளுடன் காத்துக்கிடக்கும் விவசாயிகள் அவதி

August 28, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது ஜெயந்தி விழா

August 27, 2026
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

வைத்தீஸ்வரன்கோவிலில் தமிழிசை விழா,மைக்-பெட்டியில் டிரம்ஸ் வாசித்து தருமபுரஆதீனத்தை அசத்திய ட்ரம்ஸ் சிவமணி

August 27, 2026
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

தார் வாங்குவதற்கு காசு இல்லை அதனால் சாலை போட முடியாது என கூறும் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

August 27, 2026
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

விவசாயிகளுடைய கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றித்தரவில்லை என்றால் சாவது மேல் என அறிவிப்போம் தனபால் பேட்டி

August 27, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

August 28, 2026

Recent News

தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

August 28, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.