நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்ட நெல்மணிகளுடன் காத்துக் கிடக்கும் விவசாயிகள், தனியார் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அவதி :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பட்டத்தில் 98 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. நிலத்தடி நீர் மற்றும் மழையை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்ட நிலையில், தற்பொழுது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்பட்ட குருவை சாகுபடி செய்த விவசாயிகளுக்காக 100 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கொள்முதல் நிலையங்கள் திறந்தாலும் கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் 33 இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன, கடந்த ஆண்டு கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதால், அந்தத் தொகையினை பட்டியல் எழுத்தர்கள் கட்டவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக கொள்முதல் நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை. அரசின் அறிக்கையை நம்பி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொட்டி காத்து கிடக்கின்றனர். தற்பொழுது மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீரென்று பெய்யும் மழை காரணமாக, நெல்மணிகளை நனையாமல் காப்பாற்ற மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால் தனியார் வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு, விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளதாகவும், உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி
விவசாயிகள் 3 பேர் பேட்டி உள்ளது

















