இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்
சீர்காழி புதிய பேருந்து நிலையம் போதிய மின் விளக்குகள் இல்லாமல் இரண்டு கிடப்பதால் இரவு நேரங்களில் பெண் பயணிகள் உள்ளிட்டோ அச்சத்துடன் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது சீர்காழியில் புதிய பேருந்தது நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, மதுரை, பழனி, காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கன்னி, சிதம்பரம், கடலூர் , புதுச்சேரி, சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தொலைதூர அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சீர்காழி சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது . இவ்வாறு நாள்தோறும் சுமார் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சீர்காழி பேருந்து நிலையம் வந்து செல்கின்றன. இதன் மூலம் சீர்காழி பேருந்து நிலையத்திற்கு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்து பயணிகள் பள்ளி கல்லூரி நேரங்களில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர். இதனிலையே சீர்காழி பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 43 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று முடிந்தது . ஆனால் கூடுதலாக மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாமல் நுழைவுப் பகுதி மற்றும் பேருந்து நிலையத்தின் உட்புறப் பகுதிகளில் இருண்டு கிடக்கிறது . இதனால் இரவு நேரங்களில் பேருந்துக்காக வந்து செல்லும் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.செயின் பறிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் நடமாட்டம் இருப்பதால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது . ஆகையால் சீர்காழி நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தில் அதிக அளவு மின்விளக்குகளை அமைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்













