ஸ்ரீநகர்: பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தான், ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டது.
ஜம்முவில் பாதுகாப்புப் படைகள் முற்றிலும் உஷாராக செயல்பட்டு, பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி சதி முயற்சியை தோல்வியடையச் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நிலைமையை நேரில் பார்வையிட ஜம்முவிற்கு முதல்வர் உமர் அப்துல்லா பயணமாகியுள்ளார்.
“ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. நிலைமையை நேரில் ஆய்வு செய்ய ஜம்முவிற்கு நான் செல்கிறேன்,” என்று அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.