வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு, மயிலாடுதுறை வணிகர்கள் அமைப்பான மாயூரம் சேம்பர் ஆப் காமர்ஸ் கடும் கண்டனம், விலைவாசி கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது என்பதால் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வர்த்தக சங்கமான மாயூரம் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலர் பிரகதி செந்தில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் செயலாளர் பிரகதி செந்தில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டும், ஐந்தாம் தேதி திருவாரூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் ஐந்தாம் தேதி பிற்பகலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளதாகவும், உணவு மற்றும் மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் தடைகள் மட்டும் திறந்திருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ கொண்ட எரிவாயு சிலிண்டர் 993 ரூபாய் உயர்ந்து 3237 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில்துறை பாதிக்கப்படுவதுடன் பல்வேறு பொருட்களின் விலை உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நான்காம் தேதி யார் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தாலும் எரிவாயு சிலிண்டர் உயர்வு குறித்து மத்திய அரசிடம் பேசி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பைட்:-
பிரகதி செந்தில், மாயூரம் சேம்பர் ஆப் காமர்ஸ் செயலர்















