தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் (Thug Life) திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், தற்போது புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், படம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் அளித்த ஒரு பேட்டியில், ரசிகர்களிடையே ஆவலையும், எதிர்பார்ப்பையும் கூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
“தக் லைஃப்” கதை யாருடையது ?
பேட்டியில் கமல்ஹாசன் கூறியதாவது :
“தக் லைஃப் படத்தின் கதை நான் எழுதியது. ஆனால் அந்த கதையை இயக்குனர் மணிரத்னம், சில மாற்றங்களுடன் படமாக்கியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியை மாற்றி, வேறு ஒரு கோணத்தில் படத்தை முடிக்கிறார்.”
‘அமர் ஹைன்’ கதை தான் தக் லைஃப் ?
மேலும், கமல்ஹாசன் இதற்கு முன் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கான கதைத் தலைப்பை ‘அமர் ஹைன்’ என வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
அந்த கதையில்,
“நாயகன் இறந்துவிட்டார் என்று அனைவரும் நினைக்கும் நிலையில், அவர் உயிருடன் தான் இருப்பார் என்பதுதான் கதைமுனை,”
என்று கூறிய கமல், ‘தக் லைஃப்’ படம் இந்தக் கதையுடன் தொடர்புடையதாகவும், ஆனால் சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், தக் லைஃப் திரைப்படம் ஒரு சுவாரசியமான திருப்பங்களும், திடுக்கிடும் காட்சிகளும் நிறைந்த அதிரடியான கதைமாந்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.