சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சம்பா கட்டளை பகுதியை சேர்ந்தவர் கலை, இரவு கலை தனது விலை உயர்ந்த டியூக் என்ற இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். இது குறித்து கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி பதிவுகளை திருவெண்காடு காவல்துறையினர் கைப்பற்றி அதன் மூலம் விசாரணை செய்து வருகின்றனர்.

















