திருவனந்தபுரம் : கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, மாநிலத்தில் கனமழை தொடர்ந்துவருகிறது. இதனால், 12 மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை மற்றும் சில மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே 26ஆம் தேதி வரை கடலுக்கு கடும் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு தேவை இல்லாமல் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் :
பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு
மே 24 – எச்சரிக்கைகள் :
ஆரஞ்சு அலர்ட்: கண்ணூர், காசர்கோடு
மஞ்சள் அலர்ட்: பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு
மே 25 – எச்சரிக்கைகள் :
ஆரஞ்சு அலர்ட்: கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு
மஞ்சள் அலர்ட்: திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு
மே 26 – எச்சரிக்கைகள் :
ஆரஞ்சு அலர்ட்: திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு
மஞ்சள் அலர்ட்: திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி
மழைப்பொழிவு அளவு :
ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்களில் 11 முதல் 20 செ.மீ. வரை
மஞ்சள் அலர்ட் மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும்