குமரி கோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – ஆறு மாதமாக நடைபெற்ற வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வியற்றதில் – சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு குழுவின் தலைவர்கள் முதலை நடமாடும் பகுதிகளை இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
குமரி மாவட்டத்தின் மேற்கு மலையோர பகுதியான களியல் பகுதி வழியாக செல்லும் கோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக கண்டறியப்பட்டு – அதற்கான வீடியோ காட்சிகளும் பொதுமக்களால் வெளியிடப்பட்டது .
தொடர்ந்து முதலையை பிடிப்பதற்காக களியல் வனத்துறையினரும் உட்பட -குமரி மாவட்ட வனத்துறையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இவர்கள் அமைத்த பொறிற்குள்ளும் ,கூண்டிற்குள்ளும் சிக்காமல் ஆறு மாதத்திற்கு மேலாக முதலை இவர்களுக்கு போக்கு காட்டி வந்துள்ளது .
இந்த நிலையில் முதலை தென்பட்டதாக கூறப்படும் பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் அப்புறமாக மற்றொரு பகுதியில் முதலை தென்பட்டுள்ளது .அதையும் பொதுமக்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.முதலையைப் பிடித்து கோதையாற்றிலிருந்து அப்புறப்படுத்த பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து
முதலையை பிடிக்க ஆராய்ச்சியாளர்கள் உட்பட 12 பேர் அடங்கிய குழு குமரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
அதன் முன்னோடியாக குழுவின் தலைவர்களான ஆராய்ச்சியாளர்கள் இருவர் முதலை நடமாடும் பகுதிகளில் இன்று நேரடியாக சென்று ஆய்வை மேற்கொண்டனர்.













