தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முன்பு திமுக மாணவரணி சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.
தமிழக வெற்றிக்கழக அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சர் சரத்குமார் போதை மருந்து பயன்படுத்தியதாக வெளியான வீடியோவை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்த உத்தரவிட்ட நிலையில் திருவாரூர் அருகே கிடாரம்கொண்டான் திருவிக அரசு கலை கல்லூரி முன்பு திமுக மாணவரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் நெல்சன் மண்டேலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தின் போது போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் அமைச்சர் சரத்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் புதிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்தப் போராட்டத்தில் திருவாரூர் திமுக நகர செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகளை போலீசார் அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்து அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

















