மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச ஆயுஸ் மருத்துவ முகாமை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்:-
மயிலாடுதுறையில், மயிலாடுதுறை நகராட்சி, தருமை ஆதீனம் ஆயுஷ் மருத்துவம் மற்றும் கல்வி மையம் நடத்தும் மாபெரும் இலவச ஆயுஷ் மருத்துவ முகாம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகை தந்து முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவர் சித்த மருத்துவர் ஹோமியோபதி மற்றும் வர்மா நிபுனர்கள் பங்கேற்று சர்க்கரை நோய், நரம்பு பிரச்சனை, உடல் பருமன், வாதம், எலும்பு தேய்மானம், அஜீரண கோளாறு, மூட்டு வலி, கழுத்து, இடுப்பு, கால் வலிகள், நுரையீரல் பிரச்சனைகள், பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை, முடி கொட்டுதல், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்

















