பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே தற்போதுள்ள உறவுகள் சீராக இல்லை. எந்நேரமும் போர் மூளும் என்றும், பாகிஸ்தானின் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக போர் தான் தீர்வு என்றும் பலவித கருத்துகள் நிலவுகின்றன.
இவ்விரு நாடுகளின் அரசியல் நகர்வுகளை உலக நாடுகள் உற்றுபார்த்து வருகின்றன. இந் நிலையில் முக்கிய நகர்வாக இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 ஒத்தி வைக்கப்படலாம் என்று தகவல்கள் எழுந்துள்ளன.