பஞ்சாயத்து நிர்வாகம் நடத்துகிறார்களா? இல்லை மணி ஆட்டுகிறார்களா? கிராம சபை கூட்டத்தில் பாயில் படுத்துக்கொண்டு சமூக ஆர்வலர் ஒருவர் சரமாரியாக கேட்கும் கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லப்பள்ளி ஊராட்சி பகுதியில் கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர் புரட்சி சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் 9 மணிக்கு துவங்க இருப்பதாக அறிவிப்பு செய்த நிலையில் 11 மணிக்கு துவங்கி அரை மணி நேரத்தில் கிராம சபை கூட்டம் முடிவுற்றதை கண்டித்து அந்த கூட்டத்திலேயே பாயில் படித்துக் கொண்டு அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அதிகாரிகளை சரமாரியாக கேள்வி கேட்க துவங்கியுள்ளார்.
அப்போது வீடு கேட்க வந்தால் லஞ்சம் கேட்கிறீர்கள், மின்விளக்கு போடுவதில்லை, 500 அடி ஆழ்துளை கிணறு தோண்டிவிட்டு 700 அடியாக கணக்கு காண்பிக்க தெரிகிறது, கிராம சபை கூட்டத்தை கூட்டி அரை மணி நேரத்தில் ஏன் முடித்தீர்கள்? நிர்வாக கணக்கு வழக்குகளை ஏன் படிக்கவில்லை சமூகப் பிரச்சனை சார்ந்து ஆர் டி ஐ போட்ட நபரின் பெயரை எப்படி நீங்கள் வெளியே சொல்லலாம் என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் இங்கே வந்தால் தான் எழுவேன் என்று பிடிவாதம் செய்தது மட்டுமின்றி இங்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடத்துகிறீர்களா இல்லை மணிஆட்டுகிறீர்களா? என்று கடுமையாகப் பேசி படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.















