கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் முன்னிட்டு கல்வியே நமது எதிர்காலம் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என கோஷங்களுடன் ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அண்ணாமலை அணியினர்.
ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கல்வியே நமது எதிர்காலம் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என கோஷங்களுடன் சாலையில் ஊர்வலமாக வந்து வேப்ப முடு சந்திப்பில் உள்ள காமராஜர் திரு உருவ சிலைக்கு தொழிலதிபரும் வீ லீடர்ஸ் நிர்வாகியுமான சிவகுமார் தலைமையில் இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அண்ணாமலை அணியினர். தொடர்ந்து காமராஜர் சிலை முன்பு போதை இலலா தமிழகத்தை உருவாக்குவோம் இளைஞர்களை கல்வியின் பாதையில் பாதையில் எடுத்துச் செல்ல முயற்சிப்போம் என காமராஜர் பிறந்தநாளில் அண்ணாமலை அணியினர் உறுதிமொழி ஏற்றனர்.














