திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது :-
தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் பகுதியில் உள்ள தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரிசியில் காமராஜரின் ஓவியத்தை வரைந்து உலக சாதனை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய சாய்சரண் என்ற மாணவன் 124 வது பிறந்த நாள் இதை முன்னிட்டு 124 நிமிடங்களில் காமராஜரின் உருவப்படத்தை கருப்பு கவனி உள்ளிட்ட பாரம்பரிய அரிசியிணை கொண்டு வரைந்து அசத்தினார். மிகவும் தத்ரூபமாக காமராஜரின் உருவ படத்தை வரைந்து அசத்திய மாணவனுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவன் நெல்மணிகளால் வரைந்த காமராஜரின் படம் உலக சாதனையாக ஜாக்கி புக் ஆப் ரெக்காட்சில் பதிவு செய்யப்பட்டது.














