சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது ஏற்கனவே 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும், 5 வழக்குகளில் அவர் தண்டனை பெற்றிருப்பதாகவும் தமிழக டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை எதிர்த்து, டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 17 பக்க அறிக்கையில், இந்த வழக்கு தற்போது மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 13 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு புலனாய்வு பிரிவு இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் ஜூன் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்காக மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.