பத்ம பூஷன் விருது பெற கடந்த வாரம் டெல்லிக்கு சென்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், அங்கு ஒரு பிரபல சேனலுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில், “தல” என்றும் “சூப்பர்ஸ்டார்” என்றும் யாரும் தன்னை அழைக்க வேண்டாம் என தன் பழைய நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார் அஜித்.
அத்துடன், தனது வாழ்க்கையில் முக்கியமான இடம் வகிக்கும் மனைவி ஷாலினி குறித்து உருக்கமாக பேசிய அவர், “நான் எப்போதும் சரியான முடிவுகள் எடுத்து இருந்ததில்லை. ஆனால் கடினமான நேரங்களில் கூட ஷாலினி என்னை ஒதுக்கவில்லை. என்னை நிராசைப்படுத்தாமல், என் பக்கம் நின்றார். அவர் செய்த தியாகங்களுக்காகவே இன்று நான் இத்தனை உயரத்துக்கு வந்துள்ளேன். என் வெற்றிக்கு முழு நன்றியும் அவருக்கே செல்லும்,” என தெரிவித்துள்ளார்.
அஜித்தின் இந்த உணர்ச்சிபூர்வமான வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.