திருப்பூர் : நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்திய சூரி, தற்போது கதாநாயகனாக மாறி வெற்றிக் கட்டையை ஏறி வருகிறார். அவரின் அடுத்த திரைப்படமாகும் ‘மாமன்’, வருகிற மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
இந்த எமோஷனல் ட்ராமாவாக உருவாகியுள்ள திரைப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘விலங்கு’ எனும் வெற்றிப் பெற்ற வெப் சீரிஸை இயக்கியவர். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
திரைப்பட ப்ரோமோஷன் வேலைகளின் ஒரு பகுதியாக, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். அங்கு பேசுகையில் நடிகர் சூரி எமோஷனலாக தெரிவித்ததாவது :
“நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எல்லாத்தையும் விட்டுட்டு திருப்பூருக்கு வேலைக்காக வந்தேன். அப்போது ஒரு நாளைக்கு 20 ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஏழு நாளுக்கு 140 ரூபாய் வரும். அதில் 70 ரூபாய் செலவு பண்ணி, மீதி 70 ரூபாயை ஊருக்கு அனுப்புவேன். அந்த நாட்களில் ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன். ஆனால் இன்று அதே திருப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார் சூரி.