சென்னையில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருவாரூர் செல்லும் தனியார் பேருந்து இன்று காலை, கேணிக்கரை என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மாடு குறுக்கே வந்ததால், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இதன் காரணமாக மின்கம்பம் சாலையில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரில் தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில், காலை முதல் பல மணி நேரமாக மின்சாரம் இல்லாத காரணத்தால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்பவர்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய இன்று மாலை வரை ஆகும் என்பதால், அப்பகுதியில் மின்சாரம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














