கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் அருகே சாலை ஓரம் தோட்டத்தில் தென்னை மரத்தின் அடியில் இருந்து 15 அடி உயரத்தில் குலைகளுடன் 3 கிளைகள் பிரிந்து செல்லும் அபூர்வ காட்சி அந்த வழியாக செல்லும் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வீடியோ எடுத்து செல்கின்றனர்
அதிசய தென்னை மர வீடியோ காட்சிகள் வைரல்
மரங்களில் தென்னை மரமும் பனை மரமும் ஒற்றை தடி போன்று நிமிர்ந்து நிற்கும் மரங்களாகும் இதில் கிளைகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு தோப்பில் வளர்ந்த தென்னை மரத்தில் குலைகளுடன் மூன்று கிளைகள் பிரிந்து செல்லும் காட்சி வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது தென்னை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து 15 அடி உயரத்தில் மூன்று கிளைகள் பிரிந்து செல்கின்றன இதை பார்க்கும் பொழுது வழிநடுவே செல்லும் மக்கள் இதனை ஆச்சரியத்துடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்து செல்கின்றனர் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது













